கள்ள ஓட்டுப்போடுவதில் தகராறு... தி.மு.க. - அ.தி.மு.க.வினர் கடும் மோதல்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கள்ள ஒட்டு போடுவதில் திமுக, அதிமுகவினர் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டதால் வாக்குச்சாவடி மையம் போர்க்களமானது. 

கள்ள ஓட்டுப்போடுவதில் தகராறு... தி.மு.க. - அ.தி.மு.க.வினர் கடும் மோதல்...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைப்பெற்றது. திருக்கோவிலுர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மன்கொல்லைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நேரம் முடிவடையும் நேரத்தில் திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகுந்த அங்கிருந்த வாக்காளர்களை வெளியேற்றிவிட்டு வாக்குச்சாவடி கதவுகளை மூடிக் கொண்டு கள்ள ஓட்டு போட்டனர்.

அப்போது திமுக, அதிமுகவினரிடையே கள்ள ஒட்டு போடுவதில் திடீரென சலசலப்பு ஏற்பட்டு ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இதனால் அங்கிருந்த வாக்காளர்கள் அலறியடித்து கொண்டு சிதறி ஓடினர். இதனால் வாக்குச்சாவடி மையமே போர்க்களமாக காட்சியளித்தது. 

இது குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.