தே.மு.தி.க. செயல் தலைவர் ஆகிறார் பிரேமலதா... தொண்டர்கள் உற்சாகம்...!!

தே.மு.தி.க. செயல் தலைவர் ஆகிறார் பிரேமலதா... தொண்டர்கள் உற்சாகம்...!!

கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டதயடுத்து கட்சி தொடர்பான பெரும்பாலான கூட்டங்களை விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா முன்னின்று நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன் தினம் நடைபெற்ற தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் கட்சியில் பொருளாளராக இருக்கும் பிரேமலதாவுக்கு செயல் தலைவர் பதவி வழங்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அதே நேரத்தில் கட்சியில் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி அந்த பதவிக்கு பிரேமலதாவை நியமிக்க வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர்கள் பலர் வலியுறுத்தி இருக்கிறார்கள்.  இதுதொடர்பாக மீண்டும் ஆலோசனை நடத்தி முடிவு செய்யலாம் என கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களிடம் கூறி இருக்கிறார்கள்.

அதனைதொடர்ந்து கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் கட்சியினர் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்பதுடன் அவர்களின் குறைகளை கேட்டு நம்பிக்கையை பெற வேண்டும் என்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற வியூகம் வகுக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பிரேமலதா  விஜயகாந்த் கேட்டுக்கொண்டார்.