கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

கொரோனா பரிசோதனை கட்டணத்தை 500 ரூபாயாக குறைக்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் அரசு ஆய்வகங்களில் தனிப்பட்ட முறையில் சோதனை செய்து கொள்பவர்களுக்கு 550  ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும், தனியார் ஆய்வகங்களில் இது 900 ரூபாயாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் கொரோனா சோதனைக் கட்டணம் 600 ரூபாயாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட தமிழகத்தில் தான் கொரோனா சோதனைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

மக்கள் தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனைகளை செய்து கொள்ள வசதியாக கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.