தமிழகத்தில் தொடர்ந்து சரிந்து வரும் கொரோனா பாதிப்பு... நிம்மதி அடையும் மக்கள்

தமிழகத்தில் மேலும் 1,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து சரிந்து வரும் கொரோனா பாதிப்பு... நிம்மதி அடையும் மக்கள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து காணப்படுகிறது. தினசரி பாதிப்பை பொருத்தவரை கடந்த 9ம் தேதி முதல் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்தநிலையில், தற்போதைய கொரேனா தொற்று நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் நேற்று மட்டும் ஆயிரத்து 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 43 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் 262 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில் நேற்று 238 பேருக்கு உறுதி செய்யப்பட்டது.

நேற்று ஒரே நாளில் மூவாயிரத்து 561 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 87 ஆயிரத்து 839 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம், கொரோனா வைரஸ் பாதிப்பினால் நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 977 ஆக உயர்ந்துள்ளது.