புதுச்சேரியில் புதிதாக 91 பேருக்கு கொரோனா!!

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில், 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் புதிதாக 91 பேருக்கு கொரோனா!!

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் 52 பேருக்கும், காரைக்காலில் 31 பேருக்கும், ஏனாமில் 5 பேருக்கும், மாஹேவில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 375 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் உயிரிழப்பு இல்லை எனவும் தற்போது வீடு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை ஆயிரத்து 297 ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.