தமிழகத்தில் இன்று 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

தமிழகத்தில் இன்றையை கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நேற்று 13,990 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 29 ஆயிரத்து 655 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் 20 பேரி உயிரிழந்தநிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,886 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 6484 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.