”முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்” முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

”முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்” முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய திட்டங்களின் தொடக்கம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் ”முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்” தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை,  முதலமைச்சரின் முகவரி, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, அதிகாரிகள் திட்டங்கள் குறித்து அடிக்கடி கள ஆய்வு செய்யவேண்டும் என கூட்டத்தில்  முதலமைச்சர் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.  

இதையும் படிக்க : அமித்ஷாவும், மின் தடையும் : மின்வாரிய அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

இதில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.  இந்த முத்திரை பதிக்கும் திட்டங்கள் தொடர்பாக ஏற்கனவே மூன்று முறை ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.