கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது - விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு மாவட்டம், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது என கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது -  விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு மாவட்டம், கூரபாளையத்தில், விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சென்னிமலை பாளையம், பிச்சாண்டாம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, கீழ்பவானி விவசாயிகள் நல சங்க தலைவர் நல்லசாமி செய்தியாளா்களை சந்தித்து பேசினா். அப்போது பேசிய அவா், வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டம் மற்ற இடங்களில் தோல்வியடைந்த திட்டம் எனவும், இத்திட்டத்தால் கோடிக்கணக்கான மரங்கள் அழிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அவா் தொிவித்தார்.