சிக்கலில் 52 கல்லூரி முதல்வர்கள்...  எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான உதவித் தொகையில் முறைகேடு... 

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் மெகா முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிக்கலில் 52 கல்லூரி முதல்வர்கள்...  எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான உதவித் தொகையில் முறைகேடு... 

2011 முதல் 2014 காலகட்டத்தில்  எஸ்சி எஸ்டி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கல்வித் தொகையில் 17 கோடியே 36 லட்சத்து 369 ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் அசோக்குமார் கொடுத்த புகாரின்பேரில் பெயர் குறிப்பிடாத உயர்கல்வித்துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 52 க்கும் மேற்பட்ட கலை அறிவியல் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து பத்து விதமான முறையில் முறைகேடு நடந்திருப்பதாக பட்டியலிட்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் உயர்கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் ஆதி திராவிட, பழங்குடியின துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் முகாந்திரம் உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது

இது தொடர்பாக, 52 கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் கல்லூரி கல்வி துறை ஏழு இணை இயக்குனர்கள், ஆதி திராவிட பழங்குடியின துறையில் பணியாற்றிய 11 அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு செய்துள்ளது.