சென்னைக்கும் மதுரைக்கும் இடையில் உள்ள VIBE தான் கோயமுத்தூர்- நடிகை பிரியா பவானி சங்கர்

சென்னைக்கும் மதுரைக்கும் இடையில் உள்ள VIBE தான் கோயமுத்தூர்- நடிகை பிரியா பவானி சங்கர்

கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி மருதமலை பகுதியில் Nivetha Grand என்ற ஹோட்டலை கட்டியுள்ளார். இன்று அந்த ஹோட்டலின் திறப்பு விழா நடைபெற்றது.   இதனை நடிகை பிரியா பவானிசங்கர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

பட்ஜெட் குறைவான நல்ல படங்களுக்கும் வரவேற்பு

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த  நடிகை பிரியா பவானி சங்கர், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் அடுத்த முறை வரும்பொழுது இங்கு தங்குவது போல் வருகை புரிய முயற்சிக்கிறேன் என்றார். பட்ஜெட் குறைவான நல்ல படங்களுக்கும் வரவேற்பு கிடைப்பது ஆரோக்கியமான விஷயம் தான் என தெரிவித்தார். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, இயக்குனர் மணிரத்தினம் அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும், Nothing less than Better தான்.  

மேலும் படிக்க| இந்தியாவைக் காப்பாற்றுவதற்குத் தயாராக இருப்பீர் ... -மு.க.ஸ்டாலின்

படம் எப்படி இருக்கும் என அனைவருக்கும் தெரியும் நாம் என்ன அனுபவிக்கப் போகிறோம் என்பதைத்தான் பார்க்க வேண்டும் என்ன பதிலளித்தார். கோயமுத்தூர் அனைவருக்கும் பிடித்த ஊர் என தெரிவித்த அவர் சென்னைக்கும் மதுரைக்கும் இடையில் உள்ள ஒரு Vibe  தான் கோயமுத்தூர் என்றார். மேலும் தற்போது கோவையில் வெயில் அதிகமாக தான் உள்ளது என தெரிவித்த அவர் சென்னையை காட்டிலும் கோவையில் குறைவாகத்தான் வெயில் உள்ளது என தெரிவித்தார். 

ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் சிறிது  சலசலப்பு

இந்நிகழ்வில் மருதமலை சேனாதிபதி, அவரது மகள் நிவேதா(கவுன்சிலர்) மற்றும் குடும்பத்தினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நடிகை பிரியா பவானி சங்கரிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் சிறிது  சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் அவர்களை சீர் செய்து ஒவ்வொருவராக புகைப்படம் எடுத்துக் கொள்ள ஏற்பாடு