மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் கடிதம்...!

மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் கடிதம்...!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிஆர்பிஎப் ஆட்சேர்க்கைக்கான அறிவிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். 

உள்துறை அமைச்சகம் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சுமார் 1.30 லட்சம் கான்ஸ்டபிள் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை கடந்த வியாழக்கிழமையன்று வெளியிட்டிருந்தது. அதில் அக்னிவீரர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு உள்ள நிலையில், இந்த சிபிஆர்எஃப் பணிக்கான ஆட்சேர்ப்பு தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த தேர்வை தமிழ் உள்பட பிற மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  

இதையும் படிக்க : CMDA திட்டத்தில் வடசென்னைக்கு முக்கியத்துவம் - அமைச்சர் உறுதி!

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், சிபிஆர்எஃப் ஆட்சேர்க்கைக்கான கணினித் தேர்வு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் வேதனை தெரிவித்துள்ளார்.

மொத்தமுள்ள 9,212 இடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்பட உள்ளன, இருப்பினும் தேர்வில் மொத்தம் உள்ள 100 மதிப்பெண்களில் 25 மதிப்பெண்கள் இந்தி மொழி அடிப்படை புரிதலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டிலிருந்து இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தோர், சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய் மொழியில் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டவர், துணை ராணுவ படையில் பணியாற்ற விரும்பும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வாய்ப்பை பறிக்கும் வகையில் இந்த அறிவிக்கை அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.