இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்...!

இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்...!

எல்லோருக்கும் ஒரே சட்டம் என்ற பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய சட்ட ஆணைய தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை கைவிட வலியுறுத்தி இந்திய சட்ட ஆணைய தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், சட்டங்களில், ஒரே மாதிரியான தன்மையை கொண்டுவர முயற்சிப்பதைவிட, அனைத்து மக்களுக்கும் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளில் ஒரே மாதிரியான சூழ்நிலையை ஏற்படுத்துவதை நமது நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிக்க : மழைக்கால கூட்டத் தொடா்...திமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை!

மேலும், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்துக்கும் ஊறுவிளைவிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் எனக் கோரி, இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதிபதி ரிதுராஜ் அவஸ்திக்கு எழுதிய கடிதத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.