திருவாரூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...காரணம் இதுதான்!

திருவாரூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...காரணம் இதுதான்!

திருவாரூர் அருகே காட்டூரில், கலைஞர் கோட்டம் திறப்பு விழாவையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருவாரூர் சொல்கிறார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் இரவு 8:25 மணி அளவில் புறப்பட்டு திருச்சி சென்று அங்கிருந்து திருவாரூர் செல்கிறார். தொடர்ந்து, திருவாரூர் காட்டூரில் சென்னை தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில், 12 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பீகார் முதலமைச்சர்  நிதிஷ்குமார்  திறந்து வைக்கிறார்.

இதையும் படிக்க : ஆளுநரை எதிர்த்து மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் - மதிமுக முடிவு

பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திருவாரூரில் இருந்து மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார்.