எம்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்...!

எம்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்...!

தங்கள் தொகுதிகளின் 10 முக்கிய கோரிக்கைகளை, மாவட்ட ஆட்சியருக்கு உடனடியாக அனுப்புமாறு, அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

“ உங்கள் தொகுதியில் முதலமைச்சர் “திட்டம் :

தங்கள் தொகுதிகளின் 10 முக்கிய கோரிக்கைகளை அனுப்புமாறு எம்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், திமுக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி, கடந்த மே மாதம் 7 ஆம் தேதி “ உங்கள் தொகுதியில் முதலமைச்சர் “திட்டம் விரிவுபடுத்தப்படுவது குறித்த அறிவிப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

மு.க.ஸ்டாலின் கடிதம்:

இந்த அறிவிப்பின்படி,  தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “ உங்கள் தொகுதியில் முதலமைச்சர் “திட்டத்தின் படி, தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளை, அடுத்த 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியருக்கு எம்.எல். ஏக்கள் அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க: https://malaimurasu.com/posts/cover-story/who-is-Anna-Mani-on-google-Doodle

மிக முக்கிய கோரிக்கை:

சட்டமன்ற உறுப்பினராகிய நாம் ஒவ்வொருவரும் நமது தொகுதியின் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் நமது பங்களிப்பினை ஆற்றுவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். அந்த வகையில், மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்து, அவர்களின் நீண்டநாள் அவசிய கோரிக்கை என்ன என்பதை அறிந்து , அதில் மிக முக்கியமானது என்று சட்டமன்ற உறுப்பினராகிய நீங்கள் கருதும் 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் அளிக்கலாம். அதாவது, 

                       1. குடிநீர் மற்றும் நீர் ஆதாரத்தை மேம்படுத்தக் கூடிய உட்கட்டமைப்பு வசதிகள்,

                       2. வேளாண் உற்பத்தியை சந்தைப்படுத்துவதற்குரிய பணிகள்.

                       3. இணைப்புப் பாலங்கள் மற்றும் சாலைகள்,

                       4. மருத்துவ வசதிகள் பள்ளி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

                      5. பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ போன்ற புதிய கல்வி நிறுவனங்கள் அல்லது தற்போதுள்ள கல்வி நிறுவனங்களில் தேவைப்படும் உட்கட்டமைப்புப்                                        பணிகள். தொழில் வளர்ச்சியை மேம்படுத்தக் கூடிய வசதிகள்,

                       6. மின் மயானம், நவீன நூலகம் நகர்ப்புறங்களில் ஒருங்கிணைந்த நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள். புதிய சுற்றுலாத் தளங்கள் மற்றும்                             சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் பணிகள் போன்ற சமூக பொருளாதார மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த ப                             பணிகளை நீங்கள் பரிந்துரைக்கலாம்.

இப்படி நீங்கள் அனுப்பும் பட்டியலில் இருக்கக்கூடிய மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களின்கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் அதனை முழுமையாக நிறைவேற்ற, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.