மத்திய அரசின் அனுமதியால் குஷியில் தமிழக அரசு...விரைவில் பணிகளை தொடங்க திட்டம்!

மத்திய அரசின் அனுமதியால் குஷியில் தமிழக அரசு...விரைவில் பணிகளை தொடங்க திட்டம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் சுமார் 2 புள்ளி 23 ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. 

இதையும் படிக்க : கோயம்பேடு : ஏடிஎம் இயந்திரம் உடைந்து கிடந்ததால் பரபரப்பு...சிசிடிவியில் வெளியான உண்மை!

இந்த பணிக்கு இடையே, நடுக்கடலில் 81 கோடி ரூபாய் செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ஒருபுறம் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அனுமதி கோரி மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட துறைகளை தமிழ்நாடு அரசு நாடியது.

இந்நிலையில், பேனா நினைவு சின்னத்துக்கு மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கிய நிலையில், தற்போது மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் 15 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் அனுமதி கடிதம் கிடைக்கப் பெற்றதை அடுத்து, பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பான அடுத்த கட்ட பணிகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட உள்ளது.