சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை கொண்டாடிட ரசிகர் விஷமருந்தி தற்கொலை....

ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகரை அவரது தாயார் மற்றும் மனைவி கண்டித்ததால் மனம் உடைந்து விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை கொண்டாடிட  ரசிகர் விஷமருந்தி தற்கொலை....

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமாரி (வயது 35). இவர் சிறு வயது முதலே ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக இருந்து வந்துள்ளார். சமையல் எண்ணெய் பொருட்களை ஊர் ஊராக சென்று விற்பனை செய்யும் வேலை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

   மேலும் படிக்க | Soul of Varisu " வாரிசு படத்தின் 3- வது சிங்கிள் வெளியானது

ஒவ்வொரு ஆண்டும் ரஜினிகாந்தின் பிறந்த நாளை தனது நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடும் பழக்கத்தையும் கடைப்பிடித்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த வாரம் ரஜினியின்  பிறந்தநாளை தனது நண்பருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதற்கு தங்கமாரியின் தாயார் மற்றும் அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து கடந்த 14ஆம் தேதி இரவில்  விஷம் அருந்தி  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று பரிதாபமாக தங்கமாரி உயிரிழந்தார். உயிரிழந்த தங்கமாரிக்கு திருமணம் ஆகி ஆறு மாதங்களை ஆகின்றன என்பதும் தெரியவந்துள்ளது. பாவூர்சத்திரம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | வாரிசு - துணிவு ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு...! அப்படி என்ன தான் இருக்கு அந்த போஸ்டரில்?

 பாவூர்சத்திரம் அருகே ரஜினி ரசிகர் மனம் உடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.