கதறும் மாணவர்கள்...! பள்ளிக்கு படிக்க சென்றவர்களை கொடுமைப்படுத்தும் வாத்தியம்மா

பல்லடம் அருகே இடுவாய் அரசு பள்ளியில் மாணவர்களை கடுமையாக திட்டியதாக எழுந்த புகாரில் பள்ளி தலைமை ஆசிரியை மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கதறும் மாணவர்கள்...! பள்ளிக்கு படிக்க சென்றவர்களை கொடுமைப்படுத்தும் வாத்தியம்மா

பல்லடம் அருகே இடுவாய் அரசு பள்ளியில் மாணவர்களை ஜாதியை சொல்லி திட்டியதாக எழுந்த புகாரில் பள்ளி தலைமை ஆசிரியை மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கீதா என்பவர், அங்கு பயிலும்  மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைப்பது, செய்யாத தவறுகளை மாணவர்கள் செய்ததாக பெற்றோரிடம் சித்தரித்தல், மாணவர்கள்மன உளைச்சலுக்கு ஆளாகும் வகையில் அப்பா இல்லாத நாயே என்றெல்லாம் திட்டியதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியை கீதா மீது, திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்  சரவணக் குமார் என்பவர் அளித்த புகாரின்பேரில், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.