சி.பி.சி.ஐ.டி போலீசார் சுசில் ஹரி பள்ளியில் திடீர் ஆய்வு

சிவசங்கர் பாபா பாலியல் வழக்கின் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டி.எஸ்.பி வேல்முருகன் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி போலீசார் சுசில் ஹரி பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சி.பி.சி.ஐ.டி போலீசார் சுசில் ஹரி பள்ளியில் திடீர் ஆய்வு

சிவசங்கர் பாபா பாலியல் வழக்கின் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டி.எஸ். பி வேல்முருகன் தலைமையிலான சி. பி.சி.ஐ.டி போலீசார் சுசில் ஹரி பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சுசில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் அப்பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சி. பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த விசாரணை அதிகாரியான டி.எஸ். பி குணவர்மன் கடந்த இரு மாதங்களுக்கு முன் சி. பி.சி.ஐ.டி-யில் இருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

அதன் பின்னர் இந்த வழக்கின் விசாரணை கிடப் பில் போடப்பட்ட நிலையில் தற்போது சிவசங்கர் பாபா பாலியல் வழக்கின் புதிய விசாரணை அதிகாரியாக டி.எஸ். பி வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில்  டி.எஸ். பி வேல்முருகன் தலைமையிலான சி. பி.சி.ஐ.டி போலீசார் சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி பள்ளியில்  விசாரணை நடத்தினர்.