கோடை வெயிலின் தாக்கத்திற்கு இடையே..! கொடைக்கானலில் சாரல் மழையால் பயணிகள் மகிழ்ச்சி...!
கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதியில் மிதமான சாரல் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில்கோடை விடுமுறையை ஒட்டி நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வார விடுமுறையான இன்று சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று அதிகரித்து வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதிகளின் முழுவதும் ஒரு மணி நேரமாக மேலாக நல்ல மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக இங்கு ஒரு குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம் பைன் மரக்காடுகள் குணா குகை தூண்பாறை உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர் மேலும் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வரும் 26 ஆம் தேதி தொடங்கும் என்பதால் சுற்றுலா பயணிகளின் வரத்து மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க } ”இந்தியா துணைநிற்கும்” உக்ரைன் அதிபரை முதன்முதலில் சந்தித்த பிரதமர் மோடி!