அதிமுக குழப்பத்திற்கு பாஜகவே காரணம் - ஆளூர் ஷாநவாஸ்

அதிமுக குழப்பத்திற்கு பாஜகவே காரணம் - ஆளூர் ஷாநவாஸ்

அதிமுகவில் தற்போது நடந்து வரும் குழப்பங்களுக்கு பாஜக தலையீடுதான் காரணம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

நாகர்கோவிலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளூர் ஷா நவாஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது, அனைத்து துறைகளிலும் பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் தங்களுக்கு வேண்டாதவர்களை பழிவாங்கி வருவதாக கூறினார். ஆர்எஸ்எஸ் அமைப்பை பலப்படுத்துவதற்காக தான் பாதுகாப்பு துறை அமைச்சர் அக்னி பத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் ஆளூர் ஷா நவாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.