பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி..!!

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கங்குலிக்கு நேற்று மாலை காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், உடனே கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி..!!

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கங்குலிக்கு நேற்று மாலை காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், உடனே கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.

டெல்டா வைரஸா? அல்லது ஒமிக்ரான் வகையா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. அகமதாபாத் அணி உரிமையாளர்கள், சூதாட்ட நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து ஆய்வு செய்ய பிசிசிஐ சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

கடந்த 3 வாரங்களாக ஆய்வு மேற்கொண்ட அந்த குழு, நேற்று மதியம் தான் கங்குலியை சந்தித்து ஆய்வை சமர்பித்தது. இதனால், அந்த குழுவினரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.