TNSED செயலி மூலம் வருகை பதிவு..! இன்று முதல் அமல்..!

TNSED செயலி மூலம் வருகை பதிவு..! இன்று முதல் அமல்..!

தமிழகத்தில் TNSED செயலி மூலம் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவு செய்யும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் செயல்பட்டுவரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், இன்று முதல் வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டாம் என்றும், TNSED செயலி மூலம் மட்டுமே வருகைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.  

விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இந்த செயலியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

செயலி வருகைப்பதிவு நடைமுறை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் புதிய முறை அமலுக்கு வருகிறது. 

மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளித் தரவை உள்ளிடவும், அதைக் கண்காணிக்கவும்; ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள் மற்றும் பிற நிர்வாகப் பணியாளர்களால் இந்த செயலி பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியில் தற்போது மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகையை உள்ளிடுவதற்கான தொகுதிகள், மாணவர்களின் உடல்நிலையை பரிசோதித்து மருத்துவர்களுக்கு பரிந்துரைப்பதற்கான தொகுதிகள், பள்ளிக்கு வெளியே உள்ள மாணவர்களை கண்டறிந்து கண்காணிப்பதற்கான தொகுதிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கு பதிவு செய்வதற்கான தொகுதிகள் உள்ளன. தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.