நள்ளிரவில் ரேஸ் நடத்தி அட்ராசிட்டி .. சூப்பர் மார்க்கெட்டில் புகுந்த சொகுசு கார்...

சென்னை அண்ணா நகரில் அதிவேகத்தில் வந்த ரேஸ் கார் ஒன்று சூப்பர் மார்க்கெட் உள்ளே புகுந்து விபத்துக்குள்ளானது.

நள்ளிரவில் ரேஸ் நடத்தி அட்ராசிட்டி .. சூப்பர் மார்க்கெட்டில் புகுந்த சொகுசு கார்...

சென்னை,

சென்னை அண்ணா நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு 2 சொகுசு கார்கள் ரேஸில் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஒரு சொகுசு சார் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் சூப்பர் மார்க்கெட்டின் காவலாளி காயமடைந்தார். 

இளைஞர்கள் மற்றொரு காரில் பட்டென்று தப்பி சென்றனர். இந்த விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான கார் எனவும், இதை அவர் மகன் ராஜேஷ் தனது நண்பர்களுடன் கார் ரேஸில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.