விமானநிலையத்தில் உயிரிழந்த அசாம் பயணி...போலீசார் விசாரணை...

சென்னையில் இருந்து அசாம் பயணிக்க இருந்தவர் விமான நிலையத்தில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விமானநிலையத்தில் உயிரிழந்த அசாம் பயணி...போலீசார் விசாரணை...

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த  தீபக் பால், 34 வயதான இவர்,  சென்னையில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக புலம் பெயர்ந்த தொழிலாளராக வேலை பார்த்து வந்தார்.

இதற்கிடையில் இவர் நேற்று சென்னையில் இருந்து கவுகாத்திக்கு கிளம்பும் விமானத்தில் முன் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்ய காத்திருப்போர் அறையில் இருந்த தீபக் பாலுக்கு திடீரென உடல் வலிப்பு ஏற்பட்டு உள்ளது. 

அங்கிருந்த விமான நிலைய ஊழியர்கள் பயணி தீபக் பால் உடலை ஆம்புலன்ஸ் உதவியுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர். அங்கு சிகிச்சை அளித்த பின்னர் தீபக் பால் உடல் தேறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை அசாமிற்கு விமானம் மூலம் அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாக விமான துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனைதொடர்ந்து அதிகாலை விமான நிலையத்திற்கு வந்த  தீபத் பாலுக்கு விமான நிலையத்தில் உடல் உபாதை ஏற்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் உள்ள கழிவறை அருகே சென்ற தீபக் பால் மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விமானநிலைய போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் வந்த போலீசார், தீபக் பால் உடலை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.