தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

தொழிலாளர் விரோத சட்டத்தை உடனடியாக தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளிக் கிழமை நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிக்க : 12 மணிநேர வேலை திருத்த சட்டம்...கண்டனம் தெரிவித்த எடப்பாடி... !

இந்நிலையில் எதிர்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தி.மு.க. அரசு மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதை கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது என்றும், தமிழக தொழிலாளர்களின் நலன் காக்க அ.தி.மு.க. எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.