9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு....

தமிழத்தின் 9 மாவட்டங்களுக்கு  உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  எந்தெந்த ஒன்றியங்களில்  எப்போது  வாக்குப்பதிவு  என்பதை தற்பொது  பார்க்கலாம்..

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு....

அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி  தேர்தல் நடைபெறவுள்ளது.அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தின் இலத்தூர், புனித தோமையார்மலை, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியங்களில்  முதல் கட்ட வாக்குப்பதிவு  நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத். 

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவாண்டி

 கள்ளிக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம், திருநாவலூர், திருக்கோவிலூர்,உளுந்தூர்பேட்டை,

வேலூர் மாவட்டத்தின் குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி, பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியங்களில்   முதல்க்கட்ட வாக்குப்பதிவு  நடைபெறுகிறது.

அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தின் சோலையார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர்.  

ராணிப்பேட்டை மாவட்டத்தின் ஆற்காடு, திமிரி, வாலாஜா. 

திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி. 

தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம், கடையம், கீழ்ப்பாவூர், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு  நடைபெற உள்ளது.

 
இரண்டாம் கட்டமான 9 ஆம் தேதி  செங்கல்பட்டு மாவட்டத்தின் அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், காட்டாங்கொளத்தூர்,

காஞ்சிபுரம் மாவட்டத்தின் குன்றத்தூர், திருபெரும்புதூர்,

 விழுப்புரம் மாவட்டத்தின் காணை, கோலியனூர், மயிலம், மரக்காணம், மேல்மலையனூர், வல்லம்,

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சின்னசேலம், கள்ளக்குறிச்சி, கல்வராயன் மலை, சங்கராபுரம், தியாகதுருகம், ஆகிய ஒன்றியங்களில்  உள்ளாட்சி  தேர்தல் நடைபெறுகிறது.


அதேபோல் வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டு, கணியம்பாடி, வேலூர்,

இராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம், காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர்,

திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆலங்காயம், மாதனூர்,

திருநெல்வேலி மாவட்டத்தின் களக்காடு, நான்குனேரி, இராதாபுரம், வள்ளியூர்,

தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி ஆகிய  ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.