புத்தக திருவிழாவை தொடங்கி வைத்த அன்பில்.மகேஷ்!!!

புத்தக திருவிழாவை தொடங்கி வைத்த அன்பில்.மகேஷ்!!!

தஞ்சை அரண்மனை திடலில் 11 நாட்கள் நடைபெறும் புத்தக திருவிழாவை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில்.மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் புத்தகங்களை தேர்வு செய்து வாங்கி சென்றனர். 

தஞ்சை அரண்மனை திடலில் 5ம் ஆண்டு புத்தக திருவிழாவை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில்.மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இன்று தொடங்கிய புத்தக திருவிழா 25ம் தேதி முடிவடைகிறது, 11 நாட்கள் நடைபெற உள்ள இந்த புத்தக திருவிழாவில்  110 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, காமிக்ஸ் கதைகள், சமையல் குறிப்புகள், வரலாற்று நூல்கள் என 50 ஆயிரம் தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன, பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் புத்தக திருவிழாவில் இடம் பெற்றுள்ள புத்தகங்களை ஆர்வமுடன் பார்த்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை தேர்வு செய்து வாங்கி சென்றனர்.  குறிப்பாக பொன்னியின் செல்வன் புத்தகம் அதிக அளவில் விற்பனை ஆகிறது.