தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர் உடல்நலக்குறைவால் பலி...

செம்பட்டியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதியவர், 4 மணி நேரத்தில்  உயிரிழந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர் உடல்நலக்குறைவால் பலி...

செம்பட்டியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதியவர், 4 மணி நேரத்தில்  உயிரிழந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காந்திஜி நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில், 4-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் செம்பட்டி ரவுண்டானா பகுதியை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி ராஜா, கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தார். அவருடன் மகள் நாகலட்சுமியும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். இதன் பிறகு வீட்டிற்கு சென்ற ராஜாவுக்கு திடீரென மயக்கம் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள், உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், முதியவர் ராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கொரோனா தடுப்பூசி செலுத்தியதன் காரணமாகவே ராஜா உயிரிழந்ததாக, அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்திய 4 மணி நேரத்தில் விவசாயி மரணமடைந்த சம்பவம், செம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.