வழியில் வரும் வாகன ஓட்டிகளை..... வம்புக்கு இழுத்து சேட்டை செய்யும் யானை...!

வழியில் வரும் வாகன ஓட்டிகளை..... வம்புக்கு இழுத்து சேட்டை செய்யும் யானை...!

கோத்தகிரி மலைப்பாதையில் சமீப நாட்களாக யானைகளின்  நடமாட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. கடந்த வாரம் முள்ளூர் பகுதியில் தேயிலைத்  தோட்டத்திலிருந்து வெளியேறிய காட்டு யானை சாலையை கடக்க முற்பட்டபோது வாகன ஓட்டிகள் புகைப்படம் எடுத்து இடையூறு செய்தனர். அப்போது யானை அவர்களை துரத்திய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியது.

அதேபோல,  நேற்று மாலை தட்டப்பள்ளம் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக்காட்டு யானை சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜிப்பை திடீரென தாக்கியது. உடனே, வாகனத்தில் இருந்தவர்கள் அச்சத்துடன் வாகனத்தை எடுத்துச் சென்றனர். இதில் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.
 
மேலும், இரவு நேரமும் இதேபோல் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள காட்சி முனை பகுதியில் நீண்ட நேரமாக ஒற்றைக் காட்டு யானை மேய்ச்சலில் ஈடுபட்டது. இதனால் இருபுறமும் வாகனங்கள் அணிவகித்து நின்றன. அப்போது சாலை வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் யானையைக் கடந்து செல்ல முயன்ற போது, யானை ஆக்ரோஷம் அடைந்தது. இதையடுத்து, இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரில் ஒருவர் கீழே இறங்கி ஓடிவிட மற்றொருவர் உடனடியாக இருசக்கர வாகனத்தை திருப்பி செலுத்தி உயிர் தப்பினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க      }  அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள்... கோடை விழாவிற்கான ஏற்பாடுகளை தொடங்கும் அதிகாரிகள்!!

மேலும் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் வனத்துறையினர் அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வாகன ஓட்டிகளின் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிக்க      }  துரோகம் செய்தவர்களை தவிர மற்றவர்கள் வந்தால்... எடப்பாடி பழனிசாமி!!