துபாய் செல்கிறார் மு.க.ஸ்டாலின்...முதல்வரான பின் முதல் வெளிநாட்டு பயணம்!!

துபாய் செல்கிறார் மு.க.ஸ்டாலின்...முதல்வரான பின் முதல் வெளிநாட்டு பயணம்!!

வெளிநாடுகளின் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரு நாள் பயணமாக துபாய் செல்கிறார். 

துபாயில், 192 நாடுகள் பங்கேற்கும் மாபெரும் கண்காட்சி இம்மாதம் நடைபெறவுள்ளது. இதில் தமிழகம் சார்பில் கைத்தறி, விவசாயம், சிறு தொழில் சார்ந்த காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.  

இந்தநிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்த்திடும் விதமாக  முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அக்கண்காட்சியில் பங்கேற்க உள்ளார். இதற்காக இரண்டு நாள் பயணமாக துபாய் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  26, 27 ஆகிய தேதிகளில் கண்காட்சியை பார்வையிடுகிறார்.

முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக ஸ்டாலின் இந்த வெளிநாட்டு பயணத்தை  மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.