தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு... கேரளாவில் நிபா வைரஸ் பரவலால் நடவடிக்கை...

நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு... கேரளாவில் நிபா வைரஸ் பரவலால் நடவடிக்கை...

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத் துறை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கேரள மாநிலத்தை ஒட்டி இருக்கக் கூடிய தமிழக மாவட்டங்களில் ஏற்கனவே கொரோனோ கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு உள்ள நிலையில் தமிழக எல்லைகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் கூடுதல் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தமிழகம்  வருகையை கூடுதலாக தொடர்ந்து கண்காணிக்க தமிழக சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.