வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்ற வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு....!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்ற வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்ற வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு....!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் கொடுவாய் பகுதியை சேர்ந்தவர் வாலிபர் அருண் குமார் .34 வயதான இவர்,  பல்லடம் கோவை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள அரசு மருத்துவமனை எதிரே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணம் எடுப்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

வங்கிக்கு வந்த அவர், வாகனத்தை வங்கியின் முன்பாக, நிறுத்தி பூட்டிவிட்டு படியில் ஏறி பணம் எடுக்க வேண்டி வரிசையில் நின்றுள்ளார். சற்று நேரத்தில் வரிசையில் நின்றிருந்த அவர் மயங்கி சரிந்து கீழே விழுந்தார். இதை கண்ட அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலென்ஸ் மூலம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரது உடலை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் அருண் குமார் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார் வாலிபர் அருண் குமாரின் திடீர் உயிரிழப்பிற்கு காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை குறித்து வருகின்றனர்.