கிணற்றில் விழுந்த அரிய வகை மரநாய் பத்திரமாக மீட்பு..!

சீர்காழி அருகே தென்பாதியில் வீட்டின் கிணற்றில் விழுந்து தத்தளித்த மரநாய் குட்டிகளுடன் மீட்ட வனத்துறையினர் பாதுகாப்பான வனப்பகுதியில் விட்டனர்.

கிணற்றில் விழுந்த அரிய வகை மரநாய் பத்திரமாக மீட்பு..!

சீர்காழி அருகே தென்பாதியில் வீட்டின் கிணற்றில் விழுந்து தத்தளித்த மரநாய் குட்டிகளுடன் மீட்ட வனத்துறையினர் பாதுகாப்பான வனப்பகுதியில் விட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் வசித்து வருபவர் சீனிவாசன். இவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து வெகு நேரமாக சப்தம் கேட்டுள்ளது. அதன் அருகே சென்று பார்த்த போது கிணற்றின் உள்ளே அரிய வகை மரநாய் ஒன்று தனது குட்டிகளோடு தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன், மரநாய் மற்றும் அதன் குட்டிகளை கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்டனர். மேலும் இது குறித்து வனத்துறைக்கும் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த சீர்காழி வனத்துறையினர், அந்த அரிய வகை மரநாய் மற்றும் அதன் குட்டிகளை கைப்பற்றி வனத்துறைக்கு சொந்தமான காப்பு காட்டில் பாதுகாப்பாக விட்டனர்.