பட்டப்பகலில் துணிகரமாக நடந்த திருட்டு சம்பவம்...! போலீசார் விசாரணை...!

சீர்காழியில் அடகு கடை உரிமையாளர், இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்து வந்த இரண்டு லட்சம் திருட்டு...!

பட்டப்பகலில் துணிகரமாக நடந்த திருட்டு சம்பவம்...! போலீசார் விசாரணை...!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வடக்கு மட வளாகத்தை சேர்ந்தவர் ராகேஷ் குமார்(28). இவர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று  சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து ரூ 2 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு, தனது இரு சக்கர வாகன இருக்கையின் கீழ் வைத்து கொண்டு வந்துள்ளார். அப்போது ஒரு கடையில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு,  கடைக்கு  சென்றுள்ளார். 

பின்னர், வந்து பார்த்தபோது வாகனத்தின் இருக்கை திறந்து, உள்ளே வைத்திருந்த ரூ. 2 லட்சம் திருடு போனது தெரிய வந்தது . இது குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் ராகேஷ் குமார் புகார் அளித்தார். போலீசார் பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில், பிரதான சாலையில் துணிகரமாக நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.