தொண்டர்கள் தான் அதிமுக கட்சி என நிரூபிக்கும் (ஏப் -24) திருச்சி மாநாடு அமையும் - வைத்தியலிங்கம்
ஓ பன்னீர்செல்வம் தலைமையில் திருச்சியில் நடைபெறும் மாநாடு புரட்சித்தலைவர் சொன்னது போல தொண்டர்கள் தான் இந்த கட்சி என்பதை நிரூபிக்கும் மாநாடாக அமையும்_ வைத்தியலிங்கம்
வருகின்ற 24 திருச்சியில் நடைபெற உள்ள அதிமுக மாநாடு தொடர்பாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி-யை சந்தித்து முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன் ,ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் அனுமதி மற்றும் பாதுகாப்பு தொடர்பாக சந்த்திதனர்.
மேலும் படிக்க | 14 வயது சிறுமியின் 24 வார கருவை கலைக்க அரசு அனுமதி !!!!!
வைத்திலிங்கம் பேட்டியளிக்கையில் ....
புரட்சிதலைவர் எம்ஜிஆர் பிறந்த நாள் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த நாள் மற்றும் அதிமுகவின் 50 ஆண்டு நிறைவு முன்னிட்டு அதிமுகவின் முப்பெரும் விழாவாக திருச்சியில் இந்த பிரம்மாண்டமான மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
டிஜிபி சைலேந்திரபாபு அவர்களை சந்தித்தோம் ஏற்பாடுகள் தொடர்பாக பேசினோம்.இந்த மாநாடு எம்ஜிஆர் அவர்கள் சொன்னபடி அதிமுக என்பது தொண்டர்கள்தான் என்பதை நிரூபிக்கும் மாநாடாக இருக்கக்கூடும்.
மேலும் படிக்க | செக் மோசடி வழக்கு - நடிகர் விமலுக்கு 300 ரூபாய் அபராதம் - நீதிமன்றம் உத்தரவு
எடப்பாடி மற்றும் ஆதரவாளர்கள் இந்த மாநாட்டின் போது எங்களை கண்டு சிதறுவார்கள் கூட்டணி கட்சி சார்பில் யாரும் மாநாட்டிற்கு அழைக்கவில்லை. சசிகலாவை திருச்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு தகுந்த நேரத்தில் அதற்கான பதில் அளிக்கப்படும்.