சேலத்தில் பரபரப்பு...! மகன் கைது...தாய் உள்பட 7 பெண்கள் தீக்குளிக்க முயற்சி...!

சேலத்தில் பரபரப்பு...! மகன் கைது...தாய் உள்பட 7 பெண்கள் தீக்குளிக்க முயற்சி...!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏழு பெண்கள் தங்களது குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் பழைய வழக்கு தொடர்பாக மணிகண்டனை கிச்சிபாளையம் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிகண்டனின் தாய் மற்றும் அவரது சகோதரர்களின் மனைவிகள் உட்பட ஏழு பேர் தங்களது குழந்தைகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். 

இதையும் படிக்க : ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு சூசகமாக பதிலளித்த ஆர்.என். ரவி...மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆளுநர்!

அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தீக்குளிக்க முயன்ற பெண்களை தடுக்க முயன்றதால் தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதும், அவர்கள் கேட்காததால் தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள் மீது தண்ணீரை ஊற்றி ஆட்டோவில் குண்டுகட்டாக ஏற்றி காவல் நிலையம் அழைத்து சென்றனர். இருப்பினும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் 7 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.