விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட7 கிலோ தங்கம்...!
சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்து வந்தனர்.
அப்போது துபாயில் இருந்து வந்த 2 விமானங்களில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த 6 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த தங்கத்தை கண்டுபிடித்தனர்.
சென்னையில் ரூ.3.23 கோடி தங்கம் பறிமுதல் |#chennaiairport | #goldsmuggling | #Malaimurasu | pic.twitter. com/pHb1bOCHdA
— Malaimurasu TV (@MalaimurasuTv) November 14, 2022
அவர்கள் 6 பேரிடம் இருந்து ரூ. 2 கோடியே 34 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ 267 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதேப்போல் அபுதாபியில் இருந்து வந்த 2 விமானங்களில் பயணம் செய்த 2 பேரின் உள்ளாடைக்களில் இருந்து ரூ. 89 லட்சத்து 97 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 22 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.
2 நாள் நடத்திய சோதனைகளில் ரூ. 3 கோடியே 23 லட்சத்து 97 ஆயிரம் மதிப்புள்ள 7 கிலோ 289 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 8 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க : மழைநீரை பார்வையிட வந்த ஈபிஎஸ்...எதிராக கோஷம் எழுப்பிய திமுக நிர்வாகி!