பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 3 பேர் மயக்கம்...உணவகங்களில் அதிகாரிகள் சோதனை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 3 பேர் மயக்கம் அடைந்ததை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 3 பேர் மயக்கம்...உணவகங்களில் அதிகாரிகள் சோதனை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம்பேருந்து நிலையம் அருகே சரவணா உணவகத்தில் பல்லி விழுந்த உணவினை சாப்பிட்ட 3 பேர் மயக்கம் அடைந்தனர். அதனைதொடர்ந்து அவர்கள் மூவரும் கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சங்கராபுரம் மற்றும் தேவபாண்டலம் பகுதிகளில் உள்ள தனியார் உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.   இதே போன்று கள்ளக்குறிச்சி மெயின் ரோடு, பூட்டைசாலை, திருக்கோவிலூர் சாலை, தேவபாண்டலம் சாலையில் உள்ள அனைத்து உணவகத்திலும்  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில், நாள்பட்ட 25 கிலோ இறைச்சி, 9 கிலோ பிளாஸ்டிக் பைகள் மற்றும் காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர்.