தங்கும் விடுதி மேற்கூரை விழுந்து 3 பேர் பலி..!

தங்கும் விடுதி மேற்கூரை விழுந்து 3 பேர் பலி..!

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள கொழுமம் பகுதியில் தங்கும் விடுதியின் மேற்கூரை சுவர் இடிந்து விழுந்து மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கொழுமத்தில் பழுதடைந்து நிலையில் சமுதாய நலக்கூடம் இருந்துள்ளது.

நேற்று முழுவதும் தொடர் மழை பெய்த காரணத்தால் மேற்கூரை திடீரென பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. இதில் பஸ்சுக்காக காத்திருந்த கொழுமத்தைச் சேர்ந்த முரளி ராஜா, மணிகண்டன், கௌதம் ஆகிய மூவரும் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்.

பலத்த காயமடைந்த அவர்களை உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து குமரலிங்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்தவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பலத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது ‌

இதையும் படிக்க   | "சமாதானத் திட்டம்", இன்று துவக்கம்..!