செயற்கைக்கோள் பாகங்கள் தயாரித்த அரசு பள்ளி மாணவிகள் 2 வது முறை இஸ்ரோ பயணம்

செயற்கைக்கோள் பாகங்கள் தயாரித்த அரசு பள்ளி மாணவிகள்   2 வது முறை இஸ்ரோ பயணம்

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்

மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் ஆசாதி சாட்-1 செயற்கைகோள் SSLV - ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. ஆனால் ராக்கெட் வழிமாறியதால் வெற்றிகரமாக செயற்கைக் கோளை ஏவமுடியவில்லை. அதன் தொடர்ச்சியாக தற்போது அதே நிறுவனத்துடன் இணைந்து ஆசாதி சாட் -2 தயாரிக்கும் பணியில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாணவிகள் ஈடுபட்டிருந்தனர். அதில் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்  10 பேர் இணைந்து 50-கிராம் எடையுள்ள பேலோடு ஐ வெற்றிகராமாக தயார் செய்து இஸ்ரோவிற்கு அனுப்பினர். தற்போது அந்த பேலோடு, ஆசாதி சாட்-2-ல் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | டெண்டருக்காக பள்ளி கட்டிடங்கள் இடிப்பு - மறைமுகமாக ஒப்பந்தம் - கண்டுகொள்ளாத அதிகாரிகள்

இந்த செயற்கைக் கோள் வரும் 10-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஸ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் ஏனைய செயற்கைக் கோள்களுடன் ஏவப்படவுள்ளது. இந்த மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் திரு.க.கர்ணன் மற்றும் அறிவியல் ஆசிரியை திருமதி. சிந்தியா ஒருங்கிணைந்து இந்த பணியை செய்து முடித்தனர். இந்த மாணவிகளை மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.கார்த்திகா, மாவட்டக் கல்வி அலுவலர் திரு.முரளி, பள்ளிப் பெற்றோர் ஆசிரியர்கள் கழகத் தலைவர் திரு.ஜெயராமன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி.ஸ்ரீதேவி சண்முகம், பள்ளி உதவித் தலைமையாசிரியைகள் திருமதி.வெங்கடேஸ்வரி மற்றும் ரெகுபதி ஆகியோர் பாராட்டினார்கள். இம்மாணவிகள் வரும் 10-ம் தேதி செயற்கைக் கோள் ஏவும் நிகழ்வை நேரில் பார்க்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசியர்கள் செய்து வருகின்றனர்.
 மேலும் படிக்க | விதிக்கப்படுமா வாரிசு வரி