கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு கொரோனா பாதிப்பா?

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு கொரோனா பாதிப்பா?

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 273 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் அண்மைக்காலமாக கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றன. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆன்லைன் மூலம் வழக்கு விசாரணை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ஆளுநர் பதவிக்கு அழகல்ல...ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர்!

இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 273 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  சென்னையில் 98 பேருக்கும், செங்கல்பட்டில் 28 பேருக்கும், கன்னியாகுமரி 24 பேருக்கும், திருவள்ளூரில் 13 பேருக்கும், கோவையில் 19 பேருக்கும் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்த  ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.