தமிழகத்தில் இன்று 21வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று 21வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இன்று 21வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிபடியாக குறைந்து வரும் நிலையில் அதனை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி  மட்டுமே ஒரே ஆயுதமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்த வார இறுதி நாட்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 21 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 1600 தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.

தடுப்பூசி மையங்களுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்றுதல், முக கவசம் அணிதல் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.  அனைத்து தடுப்பூசி மைங்களிலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.