புள்ளி மானை வேட்டையாடிய 2 பேர் கைது- 20 கிலோ மான் கறி பறிமுதல்....

கிருஷ்ணகிரி அருகே புள்ளி மானை வேட்டையாடிய 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 20 கிலோ மான் கறியை பறிமுதல் செய்தனர்.

புள்ளி மானை வேட்டையாடிய 2 பேர் கைது- 20 கிலோ மான் கறி பறிமுதல்....

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நொச்சிபட்டி வனப்பகுதியில் வன அலுவலர்கள் ,வன விலங்கு வேட்டை தடுப்பு ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது, பெரியபொம்பட்டி பவர்லைன் சரகத்தில் மின் கம்பி வேலி அமைத்த இருவர், ஆண் புள்ளி மானை வேட்டையாடி, மானின் தோலை உரித்து, கைகால்களை வெட்டிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு சென்ற வன அலுவலர்கள் மானை வேட்டையாடி கொண்டிருந்த பெரிய பொம்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் இரண்டு நபர்களும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 20 கிலோ மான் கறி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், மேல் நடவடிக்கைக்காக இருவரும் கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலகம் கொண்டுவரப்பட்டனர்.