அரசு கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம் - தேடுதல் வேட்டையில் போலீசார்!

அரசு கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம் - தேடுதல் வேட்டையில் போலீசார்!

நாமக்கல்லில் கல்லூரி மாணவிகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் ராமலிங்கம் அரசு கலைக் கல்லூரியில், பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்த செம்பாளி கரடு பகுதியை சேர்ந்த ரஹ்மத் பீவி மற்றும் வளையபட்டியை சேர்ந்த கவிப்பிரியா இருவரும் நேற்று கல்லூரிக்கு சென்ற நிலையில், மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் மாணவிகள் இருவரும் கிடைக்க வில்லை.

இதையும் படிக்க : 12 மணிநேர வேலை திருத்த சட்டம்...கண்டனம் தெரிவித்த எடப்பாடி...!

இதனையடுத்து பெற்றோர்கள் நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், ஆய்வாளர் சங்கரபாண்டியன் வழக்குப்பதிவு செய்து மாயமான இரு மாணவிகளையும் தேடி வருகின்றனர். இதில் மாயமான இரு மாணவிகளும் தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.