பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளிய இந்திய அணி...

பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளிய இந்திய அணி...

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 ஒருநாள் தொடரை வென்ற இந்திய ஆடவர் அணி ஒருநாள் தொடருக்கான தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.  கடந்த வாரம் இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் ரிசஃப் பந்த்-ன் அபார ஆட்டத்தால் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

தொடரில் வெற்றி பெற்ற இந்தியா அணி 109 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. இதனால் பாகிஸ்தான் அணி 106 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

சொந்த மண்ணில் தொடரை இழந்த இங்கிலாந்து அணி 121 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.  நியூசிலாந்து அணி 128 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.