தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகினார் விராட் கோலி:  இந்திய அணியில் என்ன நடக்கிறது கோலியின் விலகலுக்கு என்ன காரணம்?

முதுகுவலி காரணமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான  2-வது டெஸ்ட் போட்டியில் மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளதால் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகினார் விராட் கோலி:  இந்திய அணியில் என்ன நடக்கிறது கோலியின் விலகலுக்கு என்ன காரணம்?

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுபயணம் செய்துள்ள இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. சென்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்ற நிலையில்,இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டெஸ்ட் கேப்டன் விராட் கோலிக்கு முதுகுவலி என்பதால், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக கேப்டன் பொறுப்பை கேஎல் ராகுல் ஏற்றுள்ளார். 

விராட் கோலிக்குப் பதிலாக ஹனுமா விஹாரி களமிறங்கியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு கேப்டனாக ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் முதல் முறையாக இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிக்கு ராகுல் தலைமை ஏற்று அணியை வழிநடத்த உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜோகன்னஸ்பர்க் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால், இரு அணிகளும் சுழற்பந்துவீச்சுக்கு அதிகமான முக்கியத்துவம் இல்லாமல் களமிறங்குகின்றன. இந்திய அணியைப் பொறுத்தவரை கேப்டன் கோலி இல்லாமல் களமிறங்குவது சற்று பின்னடைவுதான். 

இருப்பினும் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியத் தொடரின்போது முதல் டெஸ்டோடு கோலி தனது மனைவி பிரசவத்துக்காக தாயகம் திரும்பிவிட்டார். அதன்பின் இளம் வீரர்களை வைத்து இந்திய அணி சிறப்பாக பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் செயல்பட்டு டெஸ்ட் தொடரை வென்றது. ஆதலால், விராட் கோலி அணியில் இல்லாதது வெளியில் இருந்து பார்க்க பலவீனமாகத் தெரிந்தாலும் அதை நிரப்பும்வகையில் இளம் வீரர்கள் விளையாடுவார்கள் என நம்பலாம். மேலும் இந்திய அணியி கடந்த ஒரு ஆண்டுகளில் 5 வீரர்களை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.