"இரு தலைகள்" ஐபிஎல்-க்கு வருது.. நீண்ட காத்திருப்புக்கு முடிவு - இனிமேல் தான் ஆட்டம் இருக்கு!!

ரசிகர்களால் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட வீரர்கள்.. ஐபிஎல் தொடரில் தங்களது அணிகளில் இணைந்துள்ளனர். இந்த செய்தியை கேட்டு அவர்களின் ரசிகர்கள் "இனிமேல் தான் ஆட்டம் இருக்கு" என கூறிவருகின்றனர்.

"இரு தலைகள்" ஐபிஎல்-க்கு வருது.. நீண்ட காத்திருப்புக்கு முடிவு - இனிமேல் தான் ஆட்டம் இருக்கு!!

ஐபிஎல் 15 சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 6 லீக் போட்டிகள் நடந்து முடிந்து விட்டன.

இதில் சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை போன்ற அணிகள் தோற்று, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் போன்ற அணிகள் வெற்றி பெற்று சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஆனால், இதில் முன்னணி வீரர்கள் டேவிட் வார்னர், க்ளென் மேக்ஸ்வெல், ஜானி பேர்ஸ்டோ, மிட்செல் மார்ஷ் ஆகியோர் இன்னும் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளாமல் இருந்தனர். இந்நிலையில், இன்று இரு வீரர்கள் தங்களது அணிகளுடன் இணைந்துள்ளனர்.

ஆர்சிபி வீரரான க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த சூழலில் திருமணமான 4 நாட்களில் ஐபிஎல் தொடரில் பங்கேற்க இந்திய வந்துவிட்டார். இன்று ஆர்சிபி அணியில் இணைவார் எனத்தகவல் வெளியாகியுள்ளது.

இவரை தொடர்ந்து, ஜானி பேர்ஸ்டோ இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைகிறார். 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு அவர் பிளேயிங் 11 இல் இடம்பெறுவார். இந்த பட்டியலில் டேவிட் வார்னர் எப்போது இடம்பெறுவார் என்பது மட்டும் இன்னும் உறுதியாகவில்லை.