இந்தியா-மே.தீவுகள் இடையேயான கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி - கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெறுகிறது

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையேயான கடைசி மற்றும் 3-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெறுகிறது.

இந்தியா-மே.தீவுகள் இடையேயான கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி - கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெறுகிறது

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவருகிறது. ஒருநாள் தொடரை 3-0 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில் இருபது ஓவர் தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இந்நிலையில் கடைசி மற்றும் 3-வது இருபது ஓவர் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்ற இந்திய அணியும், ஆறுதலாக ஒரு வெற்றியையாவது பெற்றுவிட மேற்கிந்திய தீவுகள் அணியும் தீவிரமாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.