66வது வயதில் 38 வயது பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்..!

66வது வயதில் 38 வயது பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்..!

இந்திய அணியின் ஓய்வுப்பெற்ற கிரிக்கெட் வீரா் தனது 66 வது வயதில் இளம் வயது தோழியை  2-வது திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்திய அணிக்காக 16 டெஸ்ட் மற்றும் 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் அருண் லால். தற்போது மேற்குவங்க ரஞ்சி அணியின் பயிற்சியாளராக உள்ள இவர், தனது நீண்ட நாள் தோழி புல் புல் சாஹாவை திருமணம் செய்துகொண்டார்.

அருண் லாலுக்கு ஏற்கெனவே ரீனா என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டனர். அதன்பின்னர், முதல் மனைவியான ரீனாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்  நீண்ட காலமாக அவர் கூடவே இருந்து அருண்லால் கவனித்து வருகிறார்.  

இந்நிலையில், தனது முதல் மனைவி ரீனாவின் ஒப்புதலுடன்,  தனது நீண்ட நாள் தோழியும், ஆசிரியையுமான புல் புல் சாஹாவை அருண்லால் 2-வதாக திருமணம் செய்துகொண்டுள்ளார்.