புரோ கபடி லீக் போட்டி... தமிழ் தலைவாஸ் அணி முதல் வெற்றி...

புரோ கபடி லீக் போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது.

புரோ கபடி லீக் போட்டி... தமிழ் தலைவாஸ் அணி முதல் வெற்றி...

12 அணிகளுக்கு இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி, பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பால்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ், 8 நிமிடத்திற்குள் எதிரணியை ஆல்-அவுட் செய்து அசத்தியதுடன், முதல் பாதியில் 18 க்கு 11 என்ற புள்ளி கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. அதன் பிறகு அடுத்தடுத்து புள்ளிகளை சேகரித்த புனே அணியினர், 17 க்கு 18 என்று நெருங்கினர்.

இதனை தொடர்ந்து சுதாரித்து கொண்ட தலைவாஸ் வீரர்கள், மேலும் புள்ளிகளை குவித்ததுடன் முன்னிலையை கடைசி வரை தக்க வைத்துக் கொண்டனர். இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி 36 க்கு 26 என்ற புள்ளி கணக்கில் புனேயை தோற்கடித்தது.